பதநீர்



இந்த பதநீர் ஒரு சைவ பானம் அது மட்டும் அல்ல நமது தமிழதேசிய பானம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது.


250 மில்லி பதநீரில் உள்ள சத்துகள்


சக்கரை 28 .8 மி.கிராம்

காரம் 7 .0 மி.கிராம்

சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்

இரும்பு சத்து 5 .5 மி.கிராம்

பாசுபரசு 32 .4 மி.கிராம்

தயமின் 82 .3 மி.கிராம்

ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்

அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்

நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்

புரதம் 49 .7 மி.கிராம்

கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்கலத்தில் / பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. எல்லோரின் இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.


இரத்தகடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .


மாதவிடாய்தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள் அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய் போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

பாலுணர்வை கூட்டிட

இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவ குரிப்புகளும் காண கிடைக்கிறது.


தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .


சர்க்கரை நோய் - வெண்டைக்காய்



வெண்டைக்காய்

தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில் வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள் எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும் கொடுத்தால் பெரும் தொண்டு. அதை நான் இங்கு தருகிறேன். நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு சொல்லலாம்.

ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.) இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை இரண்டே வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று, வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு தண்ணீர் குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும்.

இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்? எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா? ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி எல்லாம் சந்தேகம் வரும்.

வாரத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம். அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா? அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள்

நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.

சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி,செய்யவேண்டும். இப்படி செய்தால் உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை செய்யும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் எடை இயல்பான அளவுக்குக் குறையும், இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால் (எல்டிஎல்) குறைக்கும், நல்லகொலஸ்டரால் (எச்டிஎல்) அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும், நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும். மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.

உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிஷங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன் 5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள். நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது வாகனங்களைச் சிறிது தொலைவிலே நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.

தாழ் சர்க்கரை நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் கடைப் பிடிக்கவேண்டியவை:

கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிடுங்கள்.




                                           

சிறுநீரகக் கல்


பீன்ஸ்

   இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி விடும்.வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.ஸ்கேன் ரிப்போர்ட்டில்  5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொல்வார். மருத்துவச் செலவாக 30,000/- ஆகும்  சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார். இந்த பிரச்சனைக்கு எளிய வழி 

   பீன்ஸ் `10 வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் மிகவும் நன்றாக கொதிக்க வைத்து, நன்றாக சூடு தனிந்த பின் மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு குடிக்க வேண்டும், அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

   கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளிவருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்...... ஆனால் வராது பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும். இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

துளசி இலை
  இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள் என்பது மிக அதிகமான காலம் , அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன் எச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்
அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை
  இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்
   இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறுடன் சேர்த்து சாப்பிட்டால் கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்
   இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிறில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்
   நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர்
   இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். .

வாழைத் தண்டு
   வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை மற்றும் கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.


மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு தினமும் 2 லிட்டரி -லிருந்து 3 லிட்டர் வரை இல்லையெனில் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.



சிறுநீராக - பாதுகாப்பு



நமது இரத்தத்தில் உள்ள உப்பையும், விஷத்தன்மையையும் பில்டர் செய்து சுத்தம் செய்யும் வேலையை நமது கிட்னி இராப்பகலாக செய்து வருகின்றது. அப்படிபட்ட கிட்னியை அவ்வப்போது நாம் தனிப்பட்ட கவனம் செலுத்தி வந்தால் அதன் ஆற்றல் நீண்ட நாள் இருப்பதுடன் ஸ்லோவாக இல்லாமல் வெகு தரத்துடன் இயங்கும்.


கொத்தமல்லிதழை என்னும் இலையை வாங்கி அதை சிறிதாக நறுக்கி சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அதன் பிறகு அதை வடிகட்டி ஆற வைத்து தினமும் ஒரு க்ளாஸ் குடித்து வந்தால் நமது கிட்னி மிகவும் சுத்தமாக்கபட்டு நன்றாக வேலை செய்யும். சால்ட் & விஷக் கழிவுகள் யூரின் மூலம் வெளி வருவதை நீங்கள் கவனிக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பில் ஒரு வித புது மாற்றத்தை உணரலாம்.

இது ஒரு இயற்கையான கிட்னியை சுத்தம் செய்யும் முறையாகும்.

முலிகை மருந்து



நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும், அருகாமை நிலத்திலும் அதிகம் பல மூலிகைகள் முதலுதவி செய்ய காத்திருக்கின்றன.முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கை மருந்தாய் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் தெரிந்திருக்க வேண்டும்.  

ஆடாதொடை

எந்த உரமும் போடாமல்,எந்த பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்த செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து கொடிய கசப்புள்ள இந்த செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்து கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வர தயங்கும் நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியை கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.

அதிமதுரம்  

இனிப்பு சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும்.


திப்பிலி

சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலி கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதுவீசிங்கைகுறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
ஓமம்

வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்து கசாயமாக்கி சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10-மிலி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து 1/2 டம்ளர் குடிக்கச் சொல்லலாம்ஒரு கிளாஸ் பெருங்காயம் கலந்த மோரோ அல்லது ஒரு ஸ்பூன் அன்னப் பொடியோ செய்து சாப்பிடலாம்

சீரகம்

லேசான கிறுகிறுப்பு அதிக பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளை கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிட குறையும்.

வாய்விடங்கம்
வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு மிளகு சேர்த்து கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு மதிய வேளையில் மோரில் பெருங்காய தூள் போட்டு சாப்பிட தீரும்.
கடுக்காய்

விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.


கற்றாழை

குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய் காலத்துவரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு வெந்தயம் பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாக கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை.
சாதிக்காய்
தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள்  சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.


இலவங்கப்பட்டை

பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்த பட்டையை தே நீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.




கணினி பாதுகாப்பு




Advanced Systemcare v4 Beta2.0



வேகம் வேகம் இதுவே இதன் பணி நமது கணினி புத்தம்புதியது போல் தொடக்கத்தில் இருந்து வேகமாக செயல்பட இது மிக துணைபுரியும் இது 4 வித வழி முறைகளில் செயல்படுகிறது

1. Quick Care

2. Deep Care

3. Turbo Boost

4. Tool Box - Smart Ram Cleaner
                      Disk Cleaner

ஓவ்வொரு பகுதியிலும் மிக சிறப்பு பெற்ற மென்பொருள்கள் அடங்கியுள்ளது மற்றும் கணினியை நல்ல முறையில் இயங்க, பாதுகாக்க, அவசியம் இந்த மென்பொருள் உதவும் இதன் உதவியுடன் os செயல்பாடு, ராம் & ஹாட்டிஸ்க் சுத்தம் செய்தல் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்தது.





Portable Office Software - Portable ஆபிஸ் மென்பொருள்




நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களும் Portable ஆகா இப்போது நாம் கைகளில். நாம் வெவ்வேறு இடங்களில் பல கணினியில் பணிபுரியும் போது நமக்கு தேவையான மென்பொருள் இருக்காது இதற்க்காக நாம் தரவிறக்கம் அல்லது Pack Up CD-யில் இருந்து தேடி எடுத்து நிறுவ வேண்டும் இதை தவிர்க்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள்களை Portable ஆகா தந்து இருக்கிறேன். இதை தரவிறக்கம் செய்து Pen Drive-ல் சேமிக்க. . .



1. Clam Win Antivirus Portable + Up Date செய்து கொள்ளும் வசதியுடன்.

2. Eraser Portable வெளியிடங்களில் நம் பணி முடிந்து சென்றதும் நாம் அழித்த File-யில்லை திரும்ப பெறும் மென்பொருள் மூலம் எடுத்து பார்க்கலாம் இதை தவிர்க்க Eraser மென்பொருள் பயன்படும்.

3. Firfox Portable நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள் சில இடங்களில் இருப்பது இல்லை இப்போது Portable ஆகா.

4. Internet Download Manager நமது தேவைகளில் தரவிறக்கம் மிக முக்கியமானது அதற்கான மென்பொருள்

5. Media Player - Audio , Video என எல்லா Format-டும் பயன்படுத்த

6. Micro Office 2007 - முழுவதும் சிறிய பைல்லாக

7. Nero Portable - Nero Express + Nero Burning Rom 10 பதிப்பு

8. Portable Office Converter - Word File-யை PDF-File ஆகா Convert செய்ய

9. SM Player Portable - மிக சிறப்பான Video Player

10. Undelete-360 - நாம் அழித்த எந்த ஒரு File-லையும் திரும்ப பெற

11. u Torrent - Torrent தரவிறக்கத்தை எளிதாக செய்ய

12. Win Rar Portable - பல தரபட்ட சின்ன File-கள் அனைத்தையும் ஒருக்கிணைக்க





தமிழ் தேதி காலண்டர்




ஆங்கில தேதியைப் பயன்படுத்தும் முறை எங்கும் நிறைந்து விட்டது. அதை தவிர்க்கவும் முடியாது, பயன்படுத்துவதில் தவறும் இல்லைஇன்றும் தமிழ் தேதியை வெளியில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்இந்து பண்டிகைகள், திருமண தேதி இவற்றை தமிழில் குறிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது  அம்மாவுக்கு குழந்தைகளின் பிறந்த தேதி ஆங்கிலத்தில் சரியாகத் தெரியாது, தமிழ் தேதியை உடனே சொல்லி விடுவார் இந்த தேதியை வைத்து நாம் ஆங்கில தேதியை கிழ்கண்ட இணையதளங்கள் மூலம் கண்டுபிடித்துவிடலாம் மற்றும் கடந்த வருடங்களின் தமிழ் நாள்காட்டி, தமிழ் மாத காலண்டர், வருகின்ற வருடங்களின் தமிழ் தேதி, மாத - வருடங்களின் விழா காலங்கள் மற்றும் அமாவசை, பவுர்னமி, பஞ்சாங்கம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்